இலங்கையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கையிருப்பு
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் கையிருப்பு இல்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam