எரிபொருள் நெருக்கடி! 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை இழக்கும் அதிவேக நெடுஞ்சாலை
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை பெற்று வந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள் (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) இயக்குனர் நிஹால் லோடிவிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு முன்பிருந்த வருமானம் கிட்டத்தட்ட பாதியாக குறைத்துள்ளது .
வாகன போக்குவரத்து பாதிப்பு
எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் போக்குவரத்து நாளொன்றுக்கு 102,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது 55,000 முதல் 60,000 வாகனங்கள் மட்டுமே இயங்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இவை 53 சதவீதமாகும்.
எரிபொருள் நெருக்கடிக்கு முன்னர், அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினூடாக சராசரி நாளாந்த வருமானம் சுமார் 28 மில்லியன் ரூபாவாகும் எனவும்,தற்போது அந்த வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
