எரிபொருள் நெருக்கடி! 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை இழக்கும் அதிவேக நெடுஞ்சாலை
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை பெற்று வந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள் (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) இயக்குனர் நிஹால் லோடிவிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு முன்பிருந்த வருமானம் கிட்டத்தட்ட பாதியாக குறைத்துள்ளது .
வாகன போக்குவரத்து பாதிப்பு
எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் போக்குவரத்து நாளொன்றுக்கு 102,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது 55,000 முதல் 60,000 வாகனங்கள் மட்டுமே இயங்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இவை 53 சதவீதமாகும்.

எரிபொருள் நெருக்கடிக்கு முன்னர், அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினூடாக சராசரி நாளாந்த வருமானம் சுமார் 28 மில்லியன் ரூபாவாகும் எனவும்,தற்போது அந்த வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam