பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு

SriLankan Airlines Dubai Iran-Israel Cold War Iran-Israel War
By Dhayani Mar 05, 2026 11:17 AM GMT
Report

புதிய இணைப்பு

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ, மார்ச் 08, 2026 அன்று கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை இயக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி, UL1205 என்ற எண்ணைக் கொண்ட கூடுதல் விமானம் மார்ச் 8, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 06.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 01.10 மணிக்கு லண்டனை வந்தடையும்.

அதன் பின்னர் UL1206 விமானம் அதே நாளில் பிற்பகல் 03.05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06.55 மணிக்கு கொழும்பு வந்தடையும்.

 மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு, 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேசம்) அல்லது WhatsApp (+94 74 444 1979) (செய்திகளுக்கு மட்டும்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவலுக்கு உங்கள் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடலாம் என அறிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

இதன்படி, 2026 மார்ச் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களிலும் கொழும்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து கொழும்பு வரும் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மத்திய கிழக்கின் துபாய், ரியாத், டோஹா, தம்மாம் மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன. 

முதலாம் இணைப்பு

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக அதன் வான்வெளியை திறந்ததன் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல விமான நிறுவனங்களால் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

விமானங்கள் 

கொழும்பு - டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 வானூர்தி சேவை.

டுபாய் - கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 வானூர்தி சேவை.

கொழும்பு - ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு | Srilanka Flight Service Details

பயணிகளுக்கான அறிவுறுத்தல்

  இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, நேற்று (04) விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 04 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு | Srilanka Flight Service Details

இதேபோல், மஸ்கட்டிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானம் 3.Z.- 7648 சரக்கு சுமையுடன் ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8.D.- 822 ஆகியவை 133 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இதற்கு கூடுதலாக, துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் F.Z.- 569 மற்றும் எமிரேட்ஸ் விமானம் EK- 654 முறையே மாலை 4.50 மணிக்கும் 6.45 மணிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US