மூழ்கும் நிலையிலிருந்த இலங்கையை தக்க நேரத்தில் மீட்டெடுத்த இந்தியா! (Photos)
2022 ஜனவரி மாதத்திலேயே இலங்கை வங்குரோத்து நிலையை அடையவிருந்தது. எனினும் இந்தியா வழங்கிய 500 மில்லியன் மற்றும் உறுதியளித்த 1400 மில்லியன் டொலர்கள் காரணமாக அந்த நிலைமை தவிர்க்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
43 வது படையணியின் மாநாடு, நேற்று கொழும்பில் இடம்பெற்றபோது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இந்த நிலை தொடரக்கூடாது, நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது, இந்தியாவிடம் செல்லவும், சீனாவிடம் செல்லவும், பங்களாதேஸிடம் செல்லவும் தேவையில்லை.
இதனை தாண்டி மாற்று கொள்கைகள் தயாரிக்கப்படவேண்டும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.
இதற்கான முன்னெடுப்புகள் நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து, பொதுமக்கள் நேரடி பங்களிப்புடன் செயற்படுத்தப்படவேண்டும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையை வென்றெடுக்க, அசாதாரண தைரியத்துடன், அசாதாரண தீர்வு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.



லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri