முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை
முட்டை விற்பனைக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது.
இந்நிலையில், ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
ஜா-அல மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், உரிமையாளருக்கு இடையில் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே சில கடைகளில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜா-அல வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மகிந்த கலுதேவ தெரிவித்துள்ளார்.
முட்டை விற்பனை செய்யக்கூடிய கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை செய்பவர்கள் மீது நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவற்றை தவிர்க்கும் நோக்கத்தில் சில வணிகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதில் முனைப்பு காட்டுவதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கிலோ கணக்கில் முட்டை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் முன்னிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
