கோட்டாபயவிற்கும் பயமில்லை: அவரின் தந்தைக்கும் பயமில்லை - கடும் ஆத்திரத்தில் மக்கள்
ஆறு நாட்களாக மண்ணெண்ணெய் எடுப்பதற்கு பாடுபடுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாம் மண்ணெண்ணெய்க்காகவும், எரிபொருளுக்காகவும் வீதியில் இருக்கும் போது மக்களின் கல்வி நடவடிக்கை வீணாவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாங்கள் கோட்டாபயவிற்கும் பயமில்லை, அவரின் தந்தைக்கும் பயமில்லை, நான்கு வயது குழந்தையும் கூட அவர் வீதிக்கு வந்தால் அடிக்கும் என கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குடும்பஸ்தரொருவர் கருத்துரைக்கையில், ஆயிரம் ரூபாவிற்கு ஒரு நாள் சாப்பிட்ட மக்களுக்கு தற்போது இரண்டாயிரம் ரூபா தேவையாக இருக்கிறது.
ஆயிரம் ரூபா தான் ஒரு நாள் சம்பளமாக இருந்தால் இன்னொரு ஆயிரம் ரூபாவை கடன் வாங்க வேண்டியதாக உள்ளது.
இலங்கை பிரஜை என்ற பெயர் மட்டும் தான். சொந்த இடம் கூட இல்லாமல் வாடகை கட்ட முடியாமல் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுப்பதா? வீட்டு கூலி கட்டுவதா? என கண்களில் கண்ணீர் ததும்ப குறிப்பிட்டுள்ளார்.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
