இலங்கையர்கள் 120,000 பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாக தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை மையங்கள்
ஐஸ் எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்தும் 90-100 பேர் மட்டுமே 2022 இல் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
ஹெரோயின் மற்றும் மரிஜுவானா பாவனையாளர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறாமலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். சிகிச்சை மையங்களில் சுமார் 3,000 பேருக்கு மட்டுமே சிகிச்சை வசதிகள் உள்ளன.
இந்தநிலையில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40,000 பேர், புதிதாக,
சிகரெட்டுகள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களாக பதிவாகி
வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



