இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்...!
இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்ட் அணி தலைவர்
இதேவேளை டெஸ்ட் அணி தலைவர் பதவியை திமுத் கருணாரத்னவுக்கு வழங்க புதிய தெரிவுக்குழு தீர்மானம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் (ODI) பதவி தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
