நாளை குற்ற புலனாய்வுத்துறைக்கு செல்லப்போகும் ராஜபக்ச குடும்பத்திலுள்ள அம்மாவும் மகனும்
நாளைய தினம், ராஜபக்ச குடும்பத்தில் முக்கிய இருவர் சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் முன்னிலையாகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ச குற்றபுலனாய்வுத் திணைக்களத்திலும் முன்னிலையாகவுள்ளார்.
அநுர குறிவைத்திருக்கும் முந்தைய அரசியல் பெரும்புள்ளிகளின் வரிசையில் அடுத்ததாக இவர்களா என்னும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, தற்போது சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் முன்னிலையாகும் பெரும்புள்ளிகள் இவர்களே என்ற நிலையில் இவ்விடயம் வழக்கத்திற்கு மாறாக பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,