குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையமொன்றில் இருவருக்கு தொற்று உறுதி
கண்டி,குண்டசாலையில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் இன்று இரண்டு பொலிஸார் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்றை தினமும் இன்றும் மேலும் இருவர் கோவிட் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி நிலையத்தில் பொலிஸ் கடமையில் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதற்காக நாடெங்கிலும் இருந்து சுமார் 120 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பயிற்சி நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளதுடன்,அங்கிருந்த பயிற்சியாளர்கள் குருணாகலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.