கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 17 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1716 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,862 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 95,975 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகிய 678 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.