நாட்டில் மீண்டும் கோவிட் பரவல் தீவிரமடையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால் மற்றுமொரு கோவிட் அலை வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் சமூக மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கோவிட் பாதிப்புக்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடும் சட்ட நடவடிக்கை
இந்த கோவிட் நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்திற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கோவிட் வைரஸ் மீண்டும் பரவினால், கட்டுப்பாடின்றி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது தமது தொழிற்சங்கத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,பெற்றோர் இது குறித்து கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 6 மணி நேரம் முன்

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
