நாட்டில் மீண்டும் கோவிட் பரவல் தீவிரமடையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால் மற்றுமொரு கோவிட் அலை வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் சமூக மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கோவிட் பாதிப்புக்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடும் சட்ட நடவடிக்கை
இந்த கோவிட் நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்திற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கோவிட் வைரஸ் மீண்டும் பரவினால், கட்டுப்பாடின்றி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது தமது தொழிற்சங்கத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,பெற்றோர் இது குறித்து கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
