இலங்கையில் கோவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 வயதிற்கு குறைந்த பெண் ஒருவரும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்ட 08 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 04 ஆண்களும் 04 பெண்களும் அடங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
