இலங்கையில் மேலும் சடுதியாக அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்!
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,225 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 129,755ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.