இலங்கையில் மேலும் ஆறு கோவிட் மரணங்கள் பதிவு
இலங்கையில் மேலும் 6 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 661ஆக உயர்ந்துள்ளது.
அரச தகவல் திணைக்கள தகவல்படி 56 வயதைக்கொண்ட பல்லேகமையை சேர்ந்த ஆண் ஒருவர், வீரபொக்குனையை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், ஹாலி எலையைசேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், மாவனல்லையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், நிட்டம்புவையை சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் மற்றும் 69 வயதான வத்தளைச்சேர்ந்த ஆண் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாத்திரம் கோவிட் தொற்றினால் இலங்கைக்குள் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1451 என்று இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 4938 ஆக உயர்ந்துள்ளது.