இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கினால் நாடுபூராகவும் போராட நேரிடும் - அ .ஜேசுதாசன்
அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டினால் கடல் தாவரங்கள், மீன் வங்கிகள் அதிகமாக இருக்கும் வடபகுதி கடலில் இவைகள் அனைத்தையும் முற்றுமுழுதாக அழித்து வருகின்ற நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடகிழக்கு இணைப்பாளர் அ .ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரசாங்கத்திடம் சொல்லுகின்றோம். ஏற்கனவே இந்திய இழுவை மடிகள் வந்து வளங்களை அழிப்பதனால் வடபகுதி மீனவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் இலங்கை அரசு அனைத்து இந்திய மீனவர்களுக்கும் அனுமதியை வழங்கப்போகின்றோம் என்பது எமது இலங்கை மீனவர்களின் வாழ்வையும் ,வாழ்வாதாரத்தையும் முழுமையாக அழிக்கின்ற செயலாகும்.
ஆகவே இந்த அரசாங்கம் இதை கவனத்தில் எடுத்து கொண்டு உடனடியாக நிறுத்த வேண்டும்
இல்லை என்றால் நாங்கள் மீனவர்களுடன் இணைந்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவோம் என்பதை அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என
தெரிவித்துள்ளார்.