கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்: சிறீதரன் விடுத்துள்ள அழைப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இன்று(09) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான நாளை(10.12.2023) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

கடந்த 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போராடிவரும் நிலையில், இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri