எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் பிடியாணையை அடுத்து, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா நேற்று முன்தினம் (17.03.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், நேற்று (18.03.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
கார் விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமை மற்றும் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam