எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் பிடியாணையை அடுத்து, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா நேற்று முன்தினம் (17.03.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், நேற்று (18.03.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
கார் விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமை மற்றும் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan