எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் பிடியாணையை அடுத்து, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா நேற்று முன்தினம் (17.03.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், நேற்று (18.03.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
கார் விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமை மற்றும் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri