எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் பிடியாணையை அடுத்து, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா நேற்று முன்தினம் (17.03.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், நேற்று (18.03.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
கார் விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமை மற்றும் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
