யாழ். ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவ பெருவிழா (Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவ பெருவிழா சிறப்பாக இடம்பெற்றள்ளது.
ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாளின் இரதோற்சவமானது இன்று (06.09.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பொன்நகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெயாவங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் வெளிவீதியில் வீற்றிருந்து எம்பெருமான் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கலந்து கொண்ட பெருந்திரலான மக்கள்
இந்த உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு
இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.
இவ் ஆலயத்தின் பிரம்மோற்சவம் கடந்த (22.08.2023) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், இன்று (07.09.2023) மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
