இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் வைத்தியசாலைகள்! வெளியான தகவல்
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அனைத்து வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன.
வெளிநோயாளர் சேவைகளுக்கு அடிப்படையான பரசிட்டமோல், விட்டமின் சி மற்றும் சேலைன் போன்றவற்றை வழங்குவதில் கூட சிரமம் உள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரத்னசிங்கத்தை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்திசாலைகளின் நிலைமை
புற்றுநோய், கண் வைத்தியசாலைகள் போன்ற சிறப்பு வசதிகளை கொண்ட வைத்தியசாலைகள், நன்கொடையில் இயங்குகின்றன என்று ரத்னசிங்கம் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான விளக்கமளிப்புக்காக, தாம் இலங்கையின் சுகாதார அமைச்சு
மற்றும் மூத்த சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும் பதில்
வழங்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
