அயர்லாந்தின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஹர்ஷிதா சமரவிக்ரம
பின்னர் 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16 ஓவர் நிறைவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.
குறித்த போட்டியில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும், தொடக்க துடுப்பாட்ட வீரர் விஷ்மி குணரத்ன 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதன்படி இந்த போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
