இலங்கை அணிக்கு எதிரான தொடர் தோல்வி : இக்கட்டான நிலையில் ரோகித் சர்மா
இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) இக்கட்டான பட்டியலில் நுழைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அவர், இலங்கைக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு இக்கட்டான பட்டியலில் நுழைந்த மூன்றாவது இந்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர்
முன்னதாக 1993இல் மொஹமட் அசாருதீன் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த அணித்தலைவராக கருதப்பட்டார்.
1997இல் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இரண்டாவது அணித்தலைவராக பதிவிடப்பட்டார்.

இந்தநிலையில் 2024இல் ரோகித் சர்மா, இந்த சங்கடப்பட்டியலில் மூன்றாவது இந்தியராக நுழைந்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது அவர் இரண்டு அரை சதங்களையும் போட்டிகளின்போது பெற்றுக்கொடுத்தார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam