மாயமான இலங்கை பெண் ஹமாஸ் அமைப்பினரால் படுகொலை: இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி
இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கை பெண் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஹமாஸ் அமைப்பினராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பெண்ணின் சடலம்
சம்பவத்தில் உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின் சடலம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் 23 இலங்கையர்களின் பெயர் பட்டியல் எகிப்திலுள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
