ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Japan
By Dhayani Jan 29, 2026 03:09 PM GMT
Report

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஒரு மருத்துவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த சகோதரிகள்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த சகோதரிகள்

இலங்கை தூதரகம் உறுதி

ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Woman Dies In Japan

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.

2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்பட்டது.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் சர்ச்சை கருத்து! பெண் அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் சர்ச்சை கருத்து! பெண் அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம்

ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு

இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமா சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஷ்மாவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஜப்பான் அரசுக்கு எதிராக தொடர்ந்த இழப்பீட்டு வழக்கு நாகோயா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சாட்சி அளித்த மருத்துவர் மசாமுனே ஷிமோ, விஷ்மாவின் உயிரை காப்பாற்ற மூன்று வெவ்வேறு கட்டங்களில் வாய்ப்பு இருந்ததாக கூறியுள்ளார்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Woman Dies In Japan

விஷ்மா கடுமையான நீரிழப்பு மற்றும் உணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் ரத்த ஓட்டம் குறைந்து, வைட்டமின் B1 குறைபாடு ஏற்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக அவருக்கு “பெரிபெரி” எனப்படும் இதய நோய் ஏற்பட்டதாக கூறினார். பின்னர் அவர் அதிர்ச்சி நிலைக்குச் சென்று, பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்ததாக விளக்கியுள்ளார்.

உணவு மற்றும் செவிலியர் பதிவுகள், சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக ஷிமோ தெரிவித்தார்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Woman Dies In Japan

கடுமையான பட்டினி நிலை

விஷ்மா உயிரிழப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு செய்யப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கடுமையான பட்டினி நிலையை காட்டும் அசாதாரண மதிப்புகள் பதிவாகியிருந்ததாகவும், அந்நிலையில் வழக்கமாக இரத்த பரிசோதனை செய்து, உடனடியாக intravenous drip (IV) வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதுவே முதல் உயிர்காக்கும் வாய்ப்பாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், விஷ்மா உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், உயிரிழந்த நாளிலும் அவரது இரத்த அழுத்தம் அளவிட முடியாத நிலையில் இருந்ததாகவும், அசாதாரணமான ஆழமான மூச்சுத் திணறல் காணப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இந்த சாட்சியம், விஷ்மா சந்தமாலியின் மரணத்தில் குடிவரவு மையத்தின் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்ற கேள்வியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.   

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த சகோதரிகள்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த சகோதரிகள்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US