ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம்

Sri Lanka Japan
By Sivaa Mayuri Dec 26, 2022 07:56 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

2021 ஆம் ஆண்டு இலங்கையின் பெண் கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக ஜப்பானின் நாகோயாவில் உள்ள குடிவரவு மையத்தின் அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவதில்லை என்று சட்டத்தரணிகள் எடுத்த முன்னைய முடிவு நியாயமற்றது என்று சுயாதீன நீதித்துறை குழு ஒன்று தீர்மானித்துள்ளது.

இது இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் தொழில்முறை அலட்சியத்தால், இலங்கை யுவதியான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமா என்பது தொடர்பில் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பிராந்திய குடிவரவு சேவைகள் அதிகாரிகளிடம், சுயாதீன நீதித்துறை குழு கோரியுள்ளது.

விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்ட விஷ்மா, வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று மரணமானார்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம் | Srilanka Women Death In Japan

குடும்பத்தினர் முறைப்பாடு

இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து வழக்கை விசாரித்த நகோயா மாவட்ட அரசு சட்டத்தரணிகள்; அலுவலகம், குடிவரவு இயக்குநர் உட்பட 13 அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று ஜூன் மாதம் முடிவு செய்தது.

இறப்புக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வரவோ அல்லது அவரது தடுப்புக்கும் அவரது மரணத்திற்கும் இடையே ஒரு காரண உறவை ஏற்படுத்த முடியவில்லை என்பதே இதற்கான காரணம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம் | Srilanka Women Death In Japan

எனினும் விஷ்மாவின் சகோதரிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு நீதித்துறை குழுவிடம் முறைப்பாட்டை அளித்தனர்.

இறந்த யுவதியின் சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர், நகோயா குடியேற்ற தடுப்பில் உள்ள அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் விஷ்மா வாழ்ந்திருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்தே தற்போது இந்த சுயாதீனக் குழுவின் தீர்மானம் வெளியாகியுள்ளது. விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார்.

எனினும் ஏதிலி அந்தஸ்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் விசாவைக் கடந்து சென்றதற்காக, 2020 ஆகஸ்ட் இல் குடிவரவு வசதியில் காவலில் வைக்கப்பட்டார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US