தமிழர்களை பகடைக்காயாய் பயன்படுத்தி கடன் பெற்று அவர்களையே அடக்கும் அரசாங்கம்: தர்மலிங்கம் சுரேஸ்

Sri Lankan Tamils Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kumar Nov 03, 2022 10:05 AM GMT
Report

உலகெங்கிலும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கின்றோம் தமிழ் மக்களை நாங்கள் சம உரிமையோடு பார்க்கின்றோம் என்கின்ற பொய்களை கூறி கடன்களைப் பெற்று மாறாக ஒரு இனத்தை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளிலே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தினைத்தை நினைவு கூர்ந்ததற்காக கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட குறித்த வழக்கு தொடர்பான விசாரனை நேற்று (02) நடைபெற்றது.

வழக்கு விசாரணை

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது.

தமிழர்களை பகடைக்காயாய் பயன்படுத்தி கடன் பெற்று அவர்களையே அடக்கும் அரசாங்கம்: தர்மலிங்கம் சுரேஸ் | Sri Lankan Tamils Economic Crisis

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ம் ஆண்டு மாசி மாதம் 01ஆம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு இறால்பண்ணையில் 1987 ஆம் ஆண்டில் தஞ்சம்புகுந்த 150 இற்கு மேற்பட்ட பொதுமக்களை அரசபடைகள் கொன்று குவித்திருந்தார்கள்.

அம்மக்களை நினைவுகூருவதற்காக மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்துபியில் கடந்த மாசி மாதம் 2022 ஆண்டு அஞ்சலி செலுத்தியதற்காகவே கொக்கட்டிச்சோலை பொலிஸார் கடந்த 13.10.2022 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களை மையமாக கொண்டு கடன் வாங்கும் அரசாங்கம் 

தமிழர்களை பகடைக்காயாய் பயன்படுத்தி கடன் பெற்று அவர்களையே அடக்கும் அரசாங்கம்: தர்மலிங்கம் சுரேஸ் | Sri Lankan Tamils Economic Crisis

“எங்களுடைய இறந்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவதை பொலிஸார் தடை செய்கின்றார்கள். நேற்று (நேற்றுமுன் தினம்) எமது உயிரிழந்த உறவுகளை யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்ல இடத்தில் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு ஏற்பாட்டு குழுவினர் சென்று சிரமதான பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த நேரம் இராணுவத்தினர் பௌத்த கொடிகளை கொண்டு வந்து துப்புரவு செய்யும் பணியினை தடுத்து நிறுத்தி அவர்களுடைய சின்னங்களை அந்த இடத்திலேயே கட்டி துப்பரவு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்.

உலகெங்கிலும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கின்றோம் தமிழ் மக்களை நாங்கள் சம உரிமையோடு பார்க்கின்றோம் என்கின்ற பொய்களை கூறி கடன்களைப் பெற்று மாறாக ஒரு இனத்தை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளிலே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மகாவலி எனப்படுகின்ற ஒரு அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதாக உலகத்திற்கு கூறி அந்த திட்டத்திலேயே தமிழர்களுடைய நிலப் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பில் இருக்கின்ற மயிலந்தனை மாதவனை போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கான முழு முயற்சிகளையும் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவையினிலே பொய்களை கூறி இங்கு இருக்கின்ற தமிழர்களுக்கு நாங்கள் எல்லா விதத்திலும் அவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் எனக்கூறி இங்கே தமிழ் மக்களின் நிலை அடக்குகின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருகின்றார்கள்.

பொறுப்புகூறல் விடயங்கள்

இதுவரையிலே இலங்கைச் சிறப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அத்தனையும் பொறுப்பு கூறல் விடயத்தை அவர்கள் தீர்மானங்கள் கட்டுப்படுத்துவது இல்லை.

இந்த தீர்மானங்கள் கட்டுப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படாது அவர்களுடைய வளங்கள் சுரண்டப்படாது ஆனால் இவ்வளவு தீர்மானங்களும் அதாவது 30/1, 46/1, 51/1 தீர்மானங்கள் பொறுப்புகூறல் விடயங்களை கட்டுப்படுத்துவதாக இல்லை இதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து நமது மக்களை அடக்குகின்ற ஒடுக்குகின்ற செயற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழ் மக்களுடைய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அவர்களுடைய சுய நிர்ணயங்கள் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை உருவாக்குவதற்கான செயல்பாடுகளை சர்வதேச சமூகங்கள் இலங்கைக்கு நிதிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் அதிலே கரிசனை கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த தீவிலே தமிழ் மக்கள் வேகமாக அழிக்கக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுகின்ற அதேவேளை இந்த இலங்கை தீவில் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சியை முழுவதும் தோல்வி பாதைக்கு இட்டு செல்லும் என்பதனை கூறிக் கொள்கின்றேன்.” என்றார். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US