தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும்! - மகிந்த வலியுறுத்துகின்றார்
தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் காலமும் பின்தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்
அவர் மேலும் கூறுகையில்,
பேச்சு வெற்றியடைய வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க வேண்டும். அதைவிடுத்து வேண்டா வெறுப்புடன் எதிரணியின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பேச்சு தோல்வியடையும் என்ற எண்ணத்துடன் தமிழ்க் கட்சியினர் பங்கேற்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் காலமும் பின்தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரு மனநிலையுடன்தான் பேச்சுக்கு வந்தார்கள். அந்தப் பேச்சுக்கள் துரதிர்ஷ்டவசமாக இடைநடுவில் நின்றுபோயின.
ஜனாதிபதியுடனான தற்போதைய பேச்சு வெற்றியளிக்க
வேண்டும் என்பதுதான் ஆளும் கட்சியினராகிய எமது விருப்பம். இதற்கு எம்மாலான
அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என தெரிவித்தார்.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
