கனடாவில் தகாத செயற்பாடு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது
கனடாவில் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்தாக குற்றம் சாட்டப்பட்டு தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோவில் மத ரீதியான நெறிமுறைகளை போதிக்கும் தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொரன்ரோ, பிக்கரிங் மற்றும் மார்க்கம் பகுதியில் மதப் படிப்புகளை கற்பிக்கும் போது பல சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக யோர்க் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாலியல் சீண்டல்
இந்த குற்றச்சாட்டினை மதத் தலைவரான 44 வயதான பிரவீன் ரனிஜன் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
சந்தேக நபர் மீது 7 பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரிக்கப்படவில்லை.
சந்தேக நபர் பிக்கரிங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் மதக் கல்வியை நடத்தி வந்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
