பிரான்ஸில் இலங்கைத் தமிழருக்கு சிறைத்தண்டனை
பிரான்ஸில் பயணிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ஆம் திகதி Corbeil-Essonnes ரயில் நிலையில் பயணி ஒருவர் மீது கத்தியால் குத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Évry-Courcouronnes குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பொலிஸாரினால் கைது
என்ன நோக்கத்திற்காக இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டார் என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

குறித்த இலங்கையர் ஏற்கனவே வேறு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன ரீதியான தாக்கம்
அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மனரீதியாக ஏற்பட்ட தாக்கமே இதற்கு காரணமாக என பலரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam