15 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த ஈழத்தமிழன்
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலி நாட்டின் போட்டியாளராக பங்கேற்ற chef தனுராஜ் ரவிராஜ் (தனு) என்பவரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.
இதன்போது தனுராஜ் ரவிராஜ்க்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்
அத்துடன், Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert - President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos - President Culinary Professionals, George Damianou - Continental Director of Southern Europe, Roberto Beltramini - Chief of Judges, Christos Gkotsis - Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam