கோட்டாபயவிற்கு ஏற்பட்ட அதே நிலை ரணிலுக்கும் ஏற்படும்! சம்பிக்க எச்சரிக்கை (Video)
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை ஏனையவர்களுக்கும் ஏற்படும் என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணர வேண்டும் என 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் இனியாவது யோசிக்க வேண்டும். திறமையான ஒருவரை - நல்ல முறையில் ஆட்சி நடத்தக் கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
அது இல்லாமல், எங்களது கட்சித் தலைவர்தான் ஆட்சி செய்ய வேண்டும், எங்களது கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் இருந்து மக்கள் மாறுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல முக்கிய அரசியல் செய்திகளை தொகுத்து வழங்குகின்றது எமது அரசியல்பார்வை நிகழ்ச்சி,