குரங்குகளுடன் மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம்!
குரங்குகளுடன் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதத்தை டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் இராட்சத அணில்கள் ஏற்படுத்துகின்றன.
எனவே காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள், டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் இராட்சத அணில் போன்ற சில விலங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் இறுதி முடிவு
இதேவேளை சீனாவுக்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்குகள் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.
இந்த குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களுக்கு இந்த விலங்கு வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த விலங்குகளை சீனாவுக்கு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் இறுதி முடிவு அல்லது முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.”என தெரிவித்துள்ளார்.
விவசாய ஆராய்ச்சி அறிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் இராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக அதிகரித்ததாக அறிக்கைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
