வெளிநாடொன்றில் இலங்கை தமிழ் இளைஞனின் வெறியாட்டம் - ஒருவர் கொடூரமாக படுகொலை
தாய்லாந்தில் தனது நண்பர் ஒருவரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தலைநகர் பேங்கொக்கின் Prawet பகுதியில் கடந்த 29ஆம் திகதியன்று இந்த கொலை சம்பவம் பதிவாகி உள்ளது.
கத்திக்குத்துக் தாக்கலை தடுக்க முயன்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கொடூரமாக படுகொலை
அபிஷேக் ராஜா என்ற இலங்கையர் தனது நண்பரான 23 வயது Adiman Hayilapeh என்பவரை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதன்போது மற்றொரு நபர், இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலின் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அபிஷேக், அவரது தங்குமிடத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரினால் கைது
பாதிக்கப்பட்டவரின் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அபிஷேக் மீது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மற்றுமொரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸாரின் நடவடிக்கைகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவான 'ஐ.ஜி.பி.என்' இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்த முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri