உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்
கோரப்பட்ட நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவேண்டுமானால், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்திப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை
ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சராக செயற்படும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan
