குவைத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கையர்: தூதரகம் வெளியிட்ட தகவல்
குவைத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கையர் தற்போது குவைத் இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி குவைத்தில் சாரதியாக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் உணவு விநியோகத்தை தாமதப்படுத்தியதற்காக வாடிக்கையாளர் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்தார்.
இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சாகர லக்ஷ்மனன் என்ற நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
குவைத் நாட்டில் 8 வருட காலமாக வசித்து வந்த நிலையில் கார் ஒன்றின் மூலம் உணவு விநயோகம் செய்துக்கொண்டிருந்த போது வாடிக்கையாளர் ஒருவரது உணவை தாமதப்படுத்தியதால் குறித்த வாடிக்கையாளர் இவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் குவைத் இலங்கை தூதரகம் குவைத் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க குவைத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குவைத் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பாகவும் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவைத் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
