மக்களை ஏமாற்றிய இலங்கை அரசு! நள்ளிரவில் அமுலான உத்தரவு
நாடு தற்போது கோவிட் தொற்று ஒரு பக்கம், அரசின் அறிவிப்புக்கள் ஒரு பக்கம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் திடீரென எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது.
இதன் காரணமாக அரசியல் தரப்பினரும் சரி பொது மக்களும் சரி பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க எதிர்வரும் 14ஆம் திகதி தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த செய்திகள் தொடர்பான விபரங்களுடனம் இந்த வாரத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் முடிவுகள் போன்றவற்றையும் விரிவாக ஆராய்கிறது அரசியல் பார்வை விசேட தொகுப்பு,