கனடாவின் ஈழத்தமிழர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது திணறும் அநுர அரசு
கனடா பிரம்டன் நகரின் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டமை இலங்கை அரசியல்வாதிகளிடம் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நினைவுத்தூபி, பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ளமையானது, கனடாவில் தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கை எடுத்து காட்டுகின்றது.
எனினும், இலங்கையை பொறுத்தவரை, இந்நாட்டின் தேசியவாதிகள் எவரும் இலங்கையில் ஒரு இனப்படுகொலை ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக, தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடாவில் நிறுவப்பட்டுள்ளமை இலங்கை தேசியவாதிகளுக்கு ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில், அரசாங்கம் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனில் அவர்களும் இதற்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படும்.
எனவே, அரசாங்க தரப்பில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
