மும்பையிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இருபத்தி ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
கொழும்பு -13 பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (15 ஆம் திகதி) காலை வந்தடைந்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட சோதனை
இதன்போது, முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 21,000 சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
