மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்
மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (15.05.2024) இடம்பெற்றுள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து தரித்து நின்றபோது பின்னால் வந்த அரச பேருந்து சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பேருந்தின் சாரதியை பேருந்தினை சற்று முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் பேருந்து சாரதி கோபமடைந்து அரச பேருந்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
பின்னர் தனியார் பேருந்து சாரதி பேருந்துடன் தப்பி சென்றதுடன் இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தனியார் பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
