மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மகிந்தவுக்காக 32 கோடி 65 லட்சத்து 82 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆர். பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 110 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வருடாந்த பாதுகாப்பு செலவுகள் பின்வருமாறு,
சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாய்,
மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாய்,
மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாய்,
கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாய்,
ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாய்,
ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாய்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
