கனடா வாழ் குடும்பம் ஒன்று இலங்கையில் செய்த நெகிழ்ச்சி செயல்
இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை கனடா வாழ் குடும்பம் ஒன்று வழங்கியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
57 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் வழங்கப்பட்டது. இதன் பெறுமதி 470 மில்லியன் ரூபாவாகும்.
தீவிர சிகிச்சை பிரிவு
சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கே தலைமையில் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒவ்வொன்றும் தலா 3 மில்லியன் ரூபாயாகும். 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
