பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர்.
குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
இணை சாம்பியன்
இந்நிலையிலேயே, இவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறித்த பதவி வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் இடம்பெற்ற முதல் தர கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றில் இலங்கை பொலிஸ் அணி இணை சாம்பியனாக வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan