கிரிக்கெட் நிர்வாக சபையில் பெரும் சர்ச்சை: திருட்டுகள் பற்றி தெரியும் என்கிறார் பிரசன்ன

Parliament of Sri Lanka Sri Lanka Cricket Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Dharu Nov 07, 2023 06:59 PM GMT
Report

இலங்கையின் விளையாட்டுத்துறையில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்பட்டதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை தான் ஒப்புக்கொள்கிறேன் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.11.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான இடைக்கால குழுவை நியமித்தமை சரியா தவறா என்பதை ஆராய அமைச்சரவையில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு- ரணிலின் துணிச்சலான முடிவென்று புகழாரம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு- ரணிலின் துணிச்சலான முடிவென்று புகழாரம்

நாடாளுமன்ற உரையாடல் 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - இலங்கை கிரிக்கெட் குறித்து இன்று காலை நான் கருத்து வெளியிட்டேன்.

தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு விதிக்கப்பபட்டுள்ளது. பிரதி சபாநாயகரே, இலங்கை கிரிக்கெட்டுக்கு இப்படி பயணிக்க முடியாதல்லவா?

இந்த அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒரு பக்கத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்கிறார். அந்த அதிகாரம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உள்ளது. அதற்கு அமைவாகவே அவர் செயற்படுகின்றார்.

இடைக்கால குழுவுக்குள் பிரச்சினைகள் காணப்படலாம். அது வேறு கதை. ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டப்படி நடந்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாக சபையில் மீண்டும் ஊழல்வாதிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

கிரிக்கெட் நிர்வாக சபையில் மீண்டும் ஊழல்வாதிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமைச்சரவை உபகுழு

இப்படி இருந்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட்டை எமது நாட்டில் எப்படி கொண்டு செல்ல முடியும்? இது குறித்து எங்களுக்கு ஒரு அறிக்கை தேவை.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வந்து இது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.

கிரிக்கெட் நிர்வாக சபையில் பெரும் சர்ச்சை: திருட்டுகள் பற்றி தெரியும் என்கிறார் பிரசன்ன | Sri Lankan Cricket Issue Robbery

ஜனாதிபதி நேற்று அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளார். அந்த விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு சரியா - தவறா என்று பாருங்கள்.

இது நகைச்சுவையானது. நானும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட் மீது எங்களுக்கு அலாதி பிரியம். இதனை ஜனாதிபதியும் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாட்டுக்கு கூற வேண்டும்.

எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் 225 பேரும் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டுக்கு அமைவாக கிரிக்கெட்டை முன் கொண்டு செல்வதற்காக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவோம்.

கிரிக்கெட் நிர்வாக சபையில் பெரும் சர்ச்சை: திருட்டுகள் பற்றி தெரியும் என்கிறார் பிரசன்ன | Sri Lankan Cricket Issue Robbery

முதலாவதாக கிரிக்கெட்டுக்குள் அரசியல் இல்லாது செய்யப்பட வேண்டும்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச - இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவிப்பேன்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - பிரதி சபாநாயகரே, எதிர்கட்சித் தலைவர் அவர்கள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு தீர்மானம் குறித்துப் பேசினார்.

அந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி நான் பேசவில்லை. கிரிக்கட் நிர்வாக சபை கலைக்கப்படுவதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் பற்றி நாங்கள் பேசவில்லை. இது குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் உரையாடப்பட்டது.

இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி: முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திலகரட்ன தில்ஷான்

இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி: முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திலகரட்ன தில்ஷான்

அர்ஜுனவால் மட்டுமே முடியும்

இது குறித்து ஜனாதிபதியும் அமைச்சரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார். எனினும் அமைச்சர் எடுத்த முடிவு சரியா தவறா என்பதை கண்டறிய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல - பிரதி சபாநாயகரே , நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தேன்.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது. வேறு யாராலும் முடியாது.

அமைச்சராக இடைக்கால குழுவையும் நியமித்தேன். இடைக்கால குழு பணியாற்றிய போது நாங்கள் சம்பியன் பட்டத்தை வென்றோம்.

கிரிக்கெட் நிர்வாக சபையில் பெரும் சர்ச்சை: திருட்டுகள் பற்றி தெரியும் என்கிறார் பிரசன்ன | Sri Lankan Cricket Issue Robbery

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதாக இன்று சர்வதேச சமூகம் கூறுகின்றது. அர்ஜுனவால் மட்டுமே கிரிக்கெட்டை மீளக் கட்டி எழுப்ப முடியும்.

மக்கள் அதனை நம்புகிறார்கள். இந்த இடைக்கால குழு குறித்து ஆராய நேற்று அமைச்சரவை தனி குழுவை நியமித்தது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச - அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்தார். இனி இதை நிறுத்துவோம். இல்லாவிட்டால் நாடாளுமன்றம் கிரிக்கெட் நிர்வாக சபை போல் மாறிவிடும்.

பிரசன்ன ரணதுங்க - சபாநாயகரே, நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசுகிறேன். இந்த நாட்டில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்க உங்கள் தந்தை பெரும் பணி செய்தார்.

கிரிக்கெட்டை இந்த நிலைக்கு கொண்டு வர அமைச்சர் காமினி திஸாநாயக்க பெரும் தியாகத்தை செய்தார்.

இங்கு தவறு அரசியல் தலையீடு அல்ல. தவறானவர்களை பதவியில் அமர்த்துவதுதான் தவறு. கலாநிதி என்.எம்.பெரேரா காலத்திலிருந்து பல அரசியல்வாதிகள் விளையாட்டைக் காப்பாற்ற தியாகங்களைச் செய்தனர்.

ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு நாட்டில் பணம் புழங்கத் தொடங்கியபோது, சூதாட்டக்காரர்கள், திருடர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் விளையாட்டிற்குள் வந்தனர். நானும் அங்கு இருந்ததால் மற்ற திருட்டுகள் பற்றி எனக்கு தெரியும்.

இன்று நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அரசு எடுத்த முடிவு அல்ல.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US