அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர்: விரைவில் தண்டனை
இலங்கையில் பிறந்த, மெல்போர்ன் நிதித் திட்டமிடுபவரான டெரன்ஸ் ரியோ ரியென்சோ நுகாரா, வாடிக்கையாளர்களின் மேலதிக நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏமாற்றுதல் மற்றும் இரண்டு திருட்டுகள் மூலம் நிதி ஆதாயம் பெற்ற 37 குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித
கையாடிய பல மில்லியன் டொலர்களுடன், அவர் கடந்த 2019இல் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் மெக்ஸிகோ, கொஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இடையே மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து கைது
இந்த நிலையில் மெக்ஸிகோவில், அவர் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் கடத்தப்பட்ட போது, அவுஸ்திரேலிய தூதரகத்தின் உதவியை நாடி அங்கு தஞ்சம் அடைந்த போதே அவருக்கு அவுஸ்திரேலியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த அக்டோபரில் மெல்போர்ன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதையடுத்து தற்போது ராவன்ஹால் சீர்திருத்த மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri