வெளிநாடு ஒன்றில் இலங்கையர் கைது - நாடு கடத்தப்படும் அபாயம்
தாய்லாந்தின் Ao Kham பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விச்சிட்டில் உள்ள Ao Kham கடற்கரையில் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி வேலை செய்ததாகவும், தாய்லாந்து தொழிலாளர் சட்டங்களை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு எதிராக ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக அவரை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பியாராலாவை பணியமர்த்திய தொழில் வழங்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தல்
பணி அனுமதியின் எல்லைக்கு அப்பால் வேலை செய்ய அனுமதித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
