கட்டுநாயக்க விமான நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் 18 தங்க பிஸ்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கட்டார் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்களை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது உடலில் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கொண்டு வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.