கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது.
42 வயதான அந்த நபர் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL225 விமானத்தில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.
இதன் போது விமான ஊழியர்கள் அவரது கனேடிய விசா குறித்து சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
எல்லை கண்காணிப்பு
பின்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவில் குடிவரவுத் துறையின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட கனேடிய விசா போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் பயணியின் இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது எனவும் அவர் வத்தளையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து 4.5 மில்லியன் ரூபாய்க்கு போலி கனேடிய விசாவைப் பெற்றுள்ளார் எனவும் சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் சென்று பின்னர் வேறு விமானத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி பயண ஆவணம்
ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு போலி பயண ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமான முறையில் கனடா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பட்டியலை இந்த கைதும் சேர்க்கப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri