பல சேவைகளை இரத்து செய்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்
விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை ரத்து செய்வது அவசியம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினை
அத்துடன், பயணிகள் தங்கள் இறுதி இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருவதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.
முன்னதாக, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானம் ஒன்று தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக, ரத்துச்செய்யப்பட்டதான செய்தி எமது செய்தித்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam