இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்! - சர்வதேச ஃபிட்ச் மதிப்பீடு எச்சரிக்கை
இலங்கை தற்போது ஒரு பெரிய வெளிநாட்டு இருப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், இது 2023க்குள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஃபிட்ச் மதிப்பீடுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தனது வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் எனவும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபிட்ச் மதிப்பீடுகளின்படி, இலங்கையின் பொது மற்றும் வெளிநாட்டு நிதி நவம்பர் 2020 முதல் கீழ்நோக்கிச் செல்கிறது, இது இலங்கையை சிசிசி வகைக்கு தரமிறக்கச் செய்தது.
தரமிறக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 க்குள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறையும்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் மறுத்து வருவதால் வருங்காலங்களில் கடுமையான அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஃபிட்ச் மதிப்பீடு எச்சரித்துள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
