வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுகமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 17 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்துள்ளது.
அத்துடன், இன்று (23.10.2022) காலை 05.30 மணிக்கு அதே கடல் பிராந்தியத்தில் காணப்பட்டுள்ளது.
சூறாவளி
இது தற்போது Port Blair (Capital city of the Andaman Islands) இருந்து வட மேற்காக 580 கிலோமீற்றர் தூரத்திலும் Sagar Island (West Bengal, India) இருந்து தெற்காக 700 கிலோ மீற்றர் தூரத்திலும் Barisal (South-central City, Bangladesh) இருந்து தெற்காக 830 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் இந்த சூறாவளியானது தொடர்ந்து தனது நகரும் திசையை மாற்றி, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி காலை வங்காளதேச கரையை TINKONA Island இற்கும் SANDWIP இற்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு சூறாவளியாக வலுவடைந்ததன் பின்னர் இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட சிட்ரங் (Sitrang - Pronounce as Si-Trang) என்னும் பெயர் இதற்கு வழங்கப்படும்.
இந்த சூறாவளியின் காரணத்தினால் இலங்கைக்கு நேரடியாக எந்தவித தாக்கமும் இல்லை என ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி
மேலும், அதிக மழைவீழ்ச்சிக்காரணமாக நீர்வீழ்ச்சி, ஏரிகள், கங்கை மற்றும் கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் நீராட செல்ல வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக அறிக்கையொன்றில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
அதிக மழை வீழ்ச்சிக்காரணமாக நீர் மட்டம் திடீரென அதிகரிக்கக் கூடும் ஆகையால் ஆறு மற்றும் அதன் கிளைகள் இருக்கும் இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பிரதேச வாசிகளும் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் சேவைகளில் இருக்கும் உயிர்காப்பாளர்கள் மற்றும் சமூக பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கமைய பொதுமக்களை செயற்படுமாறும் இவ்வாறான இடங்களுக்கு சென்று மது அருந்துவதற்கும் நீராடுவதற்கும் இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இவ்வாறன நீர்நிலைப்பகுதிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
